Wednesday, May 12, 2010

மூணார்

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் நிதிமா. அவருக்கும் வாடகை கார் நிறுவன அதிபர் பிரேம்குமாருக்கும் காதல் மலர்கிறது. நிதிமாவுக்கு பெற்றோர் நிர்ப்பந்தப்படுத்தி தம்பித்துரையை திருமணம் செய்து வைக்கின்றனர். காதல் விஷயத்தை கணவனிடம் சொல்லாமல் மறைக்கிறார்.

இருவரும் மூணாருக்கு தேனிலவு செல்கின்றனர். அங்கு பழைய காதலன் பிரேம் வந்து நிதிதமாவை வலுக்கட்டாயமாக இழுக்கிறார். அவர் கூட்டாளிகள் தம்பித்துரையை மலையில் இருந்து பள்ளத்தில் தூக்கி வீசுகின்றனர். பிறகு கொலை பழி தங்கள் மேல் விழாமல் இருக்க போலீசுக்கு பணம் கொடுத்து சரிகட்டுகின்றனர்.

தம்பித்துரையை பழங்குடியினர் குற்றுயிர் குலையுயிராய் தூக்கி போய் சாமியார் ஒருவரிடம் ஒப்படைத்து காப்பாற்றுகின்றனர். குணமானதும் தன்னை கொல்ல முயன்றவர்களை பழிக்குப் பழிவாங்குகிறார் தம்பித்துரை. அவரை பிடிக்க சி.பி.ஐ. அதிகாரி ரஞ்சித் புறப்படுகிறார். கண்டு பிடித்தாரா என்பது கிளைமாக்ஸ்...

மூணாறில் சில மாதங்களுக்கு முன் நடந்த நிஜகொலை சம்பவத்தை கருவாக வைத்து கதை பின்னப்பட்டு உள்ளது. மர்ம உருவம் தொடர்ந்து கொலைகள் செய்வது திகில்.. கொலையாளி பற்றி துப்பு துலக்க சி.பி.ஐ. அதிகாரி ரஞ்சித் ஆஜரானதும் விறுவிறுப்பு. விசாரணையில் நிதிமா கணவர் தான் கொலையாளி என தெரிவது திருப்பம்.

மூணார் பள்ளத்தாக்கு, சாமியார் மடம் என விசாரணை நீள்வது பரபரப்பு. தம்பித்துரை கொலையாளி வேடத்துக்கு பொருந்துகிறார். நிதிமா மனநோயாளியாக மருத்துவமனையில் பெரும் பகுதி வீணே கழிக்கிறார். அது நடிப்பு என தெரிவது திருப்பம். பிரேம் வில்ல காதலன்.

கே.ஆர்.விஜயா, ஆர்.சுந்தர்ராஜன், ரகசியா, ஓ.ஏ.கே. சுந்தர், வடிவுக்கரசி, வையாபுரி ஆகியோரும் உள்ளனர்.

திரைக்கதை தாறுமாறாக தாவுவதும், நாடகத்தன காட்சிகளும் வேகத்தடை போடுகின்றன. தம்பித்துரை இயக்கியுள்ளார்.

No comments:

Post a Comment