
பிரபு, அருண்விஜய் பாசக்கார அண்ணன் தம்பிகள். அருண் விஜய் பழனியில் வேன்டிரைவர் வேலை பார்க்கிறார். அநியாயத்தை கண்டு சீறுவது அவர் குணம். பெண்ணை மானபங்கம் செய்பவனை நொறுக்குகிறார்.
அவர் செயல் எதிர்வீட்டில் விருந்துக்கு வரும் சென்னை பெண் வேதிகாவை ஈர்க்கிறது. இருவரும் காதல் வயப்படுகின்றனர். பிறகு வேதிகா ஊர் திரும்பி விடுகிறார். அவரை தேடி சென்னை வருகிறார் அருண்விஜய். அப்போது பரங்கிமலையில் ரவுடி ராஜ்யம் நடத்தி அரசியலில் கால்பதிக்க துடிக்கும் பிரகாஷ்ராஜ் குறுக்கிடுகிறார். பிரகாஷ்ராஜூக்கு கிடைக்க இருந்த எம்.எல்.ஏ. சீட் அருணால் பறிபோகிறது. இதனால் ஆவேசமாகி தீர்த்துகட்ட அலைகிறார். அருண் விஜய்யோ இன்னொரு புறம் காதலியை கண்டு பிடிப்பதுடன் பிரகாஷ்ராஜூக்கு சவால் விட்டு அவரை திருமணம் செய்யவும் தயாராகிறார். ஜெயிப்பது யார் என்பது விறுவிறு கிளைமாக்ஸ்...
அருண்விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியுள்ள படம். கடாமீசையுடன் பஸ் நிலையத்தில் ரவுடிகளை துவம்சம் செய்து அறிமுகமாகும் ஆரம்பமே அமர்க்களம். வேதிகாவுடன் காதல். அண்ணன் பிரபுவை கஸ்தூரியுடன் சேர்த்து வைக்க பொய்சொல்லி பெண் பார்க்கும் தந்திரம்... சென்னையில் கொரியர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து கஞ்சாகருப்பு, சந்தானம் கூட்டணியில் செய்யும் அலப்பறைகள் கலகலப்பானவை...
பிரகாஷ்ராஜ் வருகைக்கு பின் கதை ரெக்கை கட்டுகிறது. என்கவுண்டர் போலீசிடம் இருந்து தப்ப தனது வேனை எடுத்து செல்லும் பிரகாஷ்ராஜை மடக்கி பிடிக்க அருண்விஜய் சைக்கிளில் துரத்துவது மாயாஜாலவித்தை கிளைமாக்ஸ் சண்டையில் ஹாலிவுட் அதிரடி...
வேதிகா காதலித்தும் வில்லன் கூட்டத்தில் சிக்கி தவித்தும் இருமுகம் காட்டுகிறார். பாசமான அண்ணனாக பிரபு பளிச்சிடுகிறார். கிளைமாக்சில் கஸ்தூரி இறந்ததை மறைத்து அருண்விஜய் திருமணத்தை போனிலேயே நடத்தி வைப்பது உருக்கம். பிரகாஷ்ராஜ் வில்லத்தனம் மிரட்டல் கஞ்சா கருப்பு, சந்தானம் மயில்சாமி, ஆர்த்தியின் காமெடி தர்பார் வயிற்றை புண்ணாக்கும் ரகம்.
காட்சிகளை விறுவிறுப்பாக செதுக்கி பிரமாண்டபடுத்தியுள்ளார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். கதையை புதுமையாக சொல்லி இருந்தால் இன்னும் பளிச்சிட்டு இருக்கும் மனிசர்மா பின்னணி இசையும் வெங்கடேஷ் ஒளிப்பதிவும் பக்கபலம்.
அவர் செயல் எதிர்வீட்டில் விருந்துக்கு வரும் சென்னை பெண் வேதிகாவை ஈர்க்கிறது. இருவரும் காதல் வயப்படுகின்றனர். பிறகு வேதிகா ஊர் திரும்பி விடுகிறார். அவரை தேடி சென்னை வருகிறார் அருண்விஜய். அப்போது பரங்கிமலையில் ரவுடி ராஜ்யம் நடத்தி அரசியலில் கால்பதிக்க துடிக்கும் பிரகாஷ்ராஜ் குறுக்கிடுகிறார். பிரகாஷ்ராஜூக்கு கிடைக்க இருந்த எம்.எல்.ஏ. சீட் அருணால் பறிபோகிறது. இதனால் ஆவேசமாகி தீர்த்துகட்ட அலைகிறார். அருண் விஜய்யோ இன்னொரு புறம் காதலியை கண்டு பிடிப்பதுடன் பிரகாஷ்ராஜூக்கு சவால் விட்டு அவரை திருமணம் செய்யவும் தயாராகிறார். ஜெயிப்பது யார் என்பது விறுவிறு கிளைமாக்ஸ்...
அருண்விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியுள்ள படம். கடாமீசையுடன் பஸ் நிலையத்தில் ரவுடிகளை துவம்சம் செய்து அறிமுகமாகும் ஆரம்பமே அமர்க்களம். வேதிகாவுடன் காதல். அண்ணன் பிரபுவை கஸ்தூரியுடன் சேர்த்து வைக்க பொய்சொல்லி பெண் பார்க்கும் தந்திரம்... சென்னையில் கொரியர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து கஞ்சாகருப்பு, சந்தானம் கூட்டணியில் செய்யும் அலப்பறைகள் கலகலப்பானவை...
பிரகாஷ்ராஜ் வருகைக்கு பின் கதை ரெக்கை கட்டுகிறது. என்கவுண்டர் போலீசிடம் இருந்து தப்ப தனது வேனை எடுத்து செல்லும் பிரகாஷ்ராஜை மடக்கி பிடிக்க அருண்விஜய் சைக்கிளில் துரத்துவது மாயாஜாலவித்தை கிளைமாக்ஸ் சண்டையில் ஹாலிவுட் அதிரடி...
வேதிகா காதலித்தும் வில்லன் கூட்டத்தில் சிக்கி தவித்தும் இருமுகம் காட்டுகிறார். பாசமான அண்ணனாக பிரபு பளிச்சிடுகிறார். கிளைமாக்சில் கஸ்தூரி இறந்ததை மறைத்து அருண்விஜய் திருமணத்தை போனிலேயே நடத்தி வைப்பது உருக்கம். பிரகாஷ்ராஜ் வில்லத்தனம் மிரட்டல் கஞ்சா கருப்பு, சந்தானம் மயில்சாமி, ஆர்த்தியின் காமெடி தர்பார் வயிற்றை புண்ணாக்கும் ரகம்.
காட்சிகளை விறுவிறுப்பாக செதுக்கி பிரமாண்டபடுத்தியுள்ளார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். கதையை புதுமையாக சொல்லி இருந்தால் இன்னும் பளிச்சிட்டு இருக்கும் மனிசர்மா பின்னணி இசையும் வெங்கடேஷ் ஒளிப்பதிவும் பக்கபலம்.
No comments:
Post a Comment