Sunday, May 16, 2010

சா... பூ.. த்ரி

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மூன்று இளைஞர்கள் கதை...

கல்லூரி மாணவர் அர்ஷத்கான். இவர் மூப்பது வயதை தாண்டிய ஆண்டிரக பெண்களை சுற்றுகிறார். ஒரு பெண் மேல் ஆதீத காதல் வயப்பட அப்பெண்ணோ ஜிம் நடத்தும் வாலிபருடன் ஓடுகிறார். இதனால் வெறுப்பாகி நிற்கிறார்.

இன்னொரு இளைஞனான பிரஜின் திருமணமானவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை. மனைவியும் வேலை பார்க்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பட்டும் படாமல் வாழ்கின்றனர். மனைவி செல்போன் நம்பரில் ஒருவன் கிராஸ் ஆகிறான். அவனுக்கு இரவு பகலாய் மெசேஸ் அனுப்பி ஈர்ப்பாகிறாள் அதுபோல் பிரஜினுக்கும் செல்போன் தோழி கிடைக்கிறாள்.

மூன்றாவதாக அக்ஷய் பல வருடங்களாய் சுற்றி ஒரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்துகிறார். அவருக்கு மிதுனாவை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். முதலில் மறுக்கும் அக்ஷய் பிறகு காதலியை உதறி மிதுனா பின்னால் சுற்றுகிறார். மூவரும் என்ன ஆகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்...

அர்ஷத்கானின் வயதான பெண்கள் மீது வரும் காதல் சீன்கள் கலகலப்பானவை. சில இடங்களில் “ஏ”வகையை தாண்டி முகம் சுளிக்க வைக்கிறது. தோழியின் பிறந்த நாள் பார்ட்டியில் பாட்டு பாடி கூட்டத்தினரை வெறுப்பேற்றுவது சிரிப்பு... தன்னை விரும்பும் பெண்ணோடு கடைசியில் சேர்ந்து சுபமாக்குகிறார்.

அக்ஷய் காதலித்தவளை விட்டு பெற்றோர் பார்த்த பெண்ணுடன் நெருக்கமாகும் சீன்கள் அழுத்தமானவை. பிரஜின் திருமண வாழ்க்கை கால்சென்டர் இறுக்கங்களை பிரதிபலிக்கிறது. இருவரும் ஒருத்தருக்கொருத்தர் தெரியாமல் செல்போன் நண்பர்களுடன் ஜொள்ளு விடுவது தமாஷ்.

இரட்டை அர்த்த வசனங்கள், சிகரெட் பெண்கள், மதுவாடை என நிறைய அன்னியத்தனம். காட்சிகளை புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இளமைத்தனமாக நகர்த்துகிறார் இயக்குனர் அர்ஷத்கான். மிதுனா, சாரா கேரக்டரில் ஒன்றியுள்ளனர். அக்ஷயா, உஜ்ஜியினி, பிங்கி, ரிஷ்வந்த் ஆகியோரும் உள்ளனர்.

அப்பாஸ் இசையும் சஞ்சய் ஒளிப்பதிவும் பலம்.

No comments:

Post a Comment