தூத்துக்குடியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்து இளைஞர் விஜய். நேர்மையான என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தேவராஜ் பிடித்து போய் அவரைப்போல் போலீஸ் வேலையில் சேர ஆசைப்படுகிறார். சென்னை வந்து தேவராஜ் படித்த கல்லூரியிலேயே சேருகிறார். ஆட்டோ ஓட்டி படிப்பு பீஸ் கட்டுகிறார்.
தன்னுடன் படிக்கும் மாணவியை சிட்டியை கலக்கும் ரவுடி செல்லா படுக்கைக்கு அழைக்க அவன் கோட்டையிலேயே புகுந்து நொறுக்குகிறார்.
செல்லாவின் தந்தை தாதா வேதநாயகமும் அவன் கூட்டாளிகளான குட்டி தாதாக்களும் விஜய்யை அழிக்க கை கோர்க்கிறார்கள். அதன் பிறகு ஆக்ஷன் சூடு. வயதானவர் மேல் காரை ஏற்றும் போலீஸ்காரரை விரட்டி பிடித்து தண்டிப்பதில் இருந்து விஜய்யின் ஹீரோயிசம் ஆரம்பமாகிறது.
ரெயில் நிலையத்தில் பாட்டியை வழியனுப்ப வரும் அனுஷ்கா மேல் காதல் வயப்பட்டு திருமணம், குழந்தைகள் பெற்று பெயர் சூட்டுதல் என கனவில் சஞ்சரிப்பது... தமாஷான ஆட்டோக்கார வேலை... அனுஷ்கா பாட்டியை வசியப்படுத்தி வீட்டுக்குள் புகுந்து செய்யும் காதல் குறும்புகள் என கலகலப்பு செய்கிறார்.
செல்லாவை பகைத்ததும் ஆக்ஷனுக்கு திரும்புகிறது. அவன் கேம்புக்குள் புகுந்து பெண்களை படுக்கைக்கு கூப்பிடுவியா என குமுறி எடுப்பது அதிரடி...
மகன் தாக்கப்பட்டதும் ஆவேசமாக அறிமுகமாகும் தாதா தேவராஜ் ஏதோ செய்யபோகிறார் என்று பார்த்தால் விஜய்யை காரில் அழைத்து போய் தனது சமூக விரோத காரியங்களை சுற்றி காட்டி விட்டு அனுப்பி வைப்பது வேகத்தடை...
செல்லாவை தண்ணீருக்குள் சமாதியாக்குவது... வேதநாயகத்தை மந்திரியாக்க விடாமல் தடுப்பது பரபர சீன்கள்.
அனுஷ்கா அழகான காதலியாய் வருகிறார். போலீஸ் அதிகாரி தேவராஜாக வரும் ஸ்ரீஹரி மிடுக்கு காட்டுகிறார். நீண்ட தலைமுடி உருட்டும் கண்களுடன் வில்லன் செல்லாவாக நடுங்க வைக்கிறார் ரவி ஷங்கர். அமைதியான வில்லத்தனத்தில் பயமுறுத்துகிறார். சலீம் கவுஸ், கெட்ட போலீஸ் அதிகாரியாக வருகிறார் சாயாஜி ஷிண்டே.
சத்யன், மனோபாலா சிரிக்க வைக்கின்றனர். சத்யன் கொடூரமாக கொல்லப்படுவது பரிதாபம். விஜய் மகன் சஞ்சய் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.
விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் துள்ளாட்டம். கோபிநாத் ஒளிப்பதிவில் பிரமாண்டம். காட்சி அமைப்பில் விறுவிறுப்பாக கூர்தீட்டியுள்ளார் இயக்குனர் பாபுசிவன். கதையோட்டத்தில் ஜீவன் இல்லை.

No comments:
Post a Comment